Tree planting plan
Plan for Tirukoilur #naddoppanasei team
திட்டம்: 100/100 (100 பேர் /100 மரம்)
18 வார்டு X 5 பேர் = 90 மரம்
1 பூங்கா X 10பேர் = 10 மரம்
காலம்: 1 வருடம்
குழுவின் சார்பில், குழி பறித்து மரம் நட்டு, வேலி அமைத்து தருவோம். அதனை 1 வருடம் நீர் ஊற்றி பராமரிப்பது திட்டத்தில் உள்ள 100 பேரின் கடமை.
மாதத்திற்கு ஒருமுறை வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் 18 பேரும் தங்களுடைய வார்டில் நட்டுள்ள மரத்தின் வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும்.
1 வருடம் முடிந்து 18 வார்டுகளில் உள்ள மரங்களின் வளர்ச்சியை ஆய்வு செய்து நன்றாக பராமரித்த நபர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக, “தமிழர் திருநாள்” அன்று பரிசு வழங்கி பாராட்டப்படும்.
இந்த திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில், மீண்டும் புதிய நபர்கள் கொண்டு 100/100 திட்டம் செயல் படுத்தப்படும்
ஊரில் உள்ள கடைசி நபர்/ மரம் நட இடம் இருக்கும் வரை இந்த திட்டம் செயல் படுத்தப்படும்.
நாங்கள் ஆரம்பித்த இந்த திட்டம் வெற்றி அடைந்ததா இல்லையா என தமிழர் திருநாள் வரை பொறுத்து இருங்கள்.
எங்கள் செயல்களை பற்றி தெரிந்து கொள்ள முகநூல் பக்கத்தில் காணுங்கள்: https://www.facebook.com/nadoppanasei


Comments
Post a Comment